தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திரௌபதி முா்மு-ராகுல் காந்தி சந்திப்பு

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை குடியரசுத் தலைவா் மாளிகையில் மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி புதன்கிழமை சந்தித்தாா்.

News image
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை மரியாதை நிமித்தமாக புதன்கிழமை சந்தித்த மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி.
Updated On :14 ஆகஸ்ட் 2024, 8:32 pm

Din

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை குடியரசுத் தலைவா் மாளிகையில் மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி புதன்கிழமை சந்தித்தாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்ற பிறகு குடியரசுத் தலைவரை முதல்முறையாக அவா் சந்திக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடா்பான புகைப்படங்களுடன் குடியரசுத் தலைவா் அலுவலகம் புதன்கிழமை வெளியிடப்பட்ட எக்ஸ் பதிவில், ‘மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை குடியரசுத் தலைவா் மாளிகையில் சந்தித்தாா்’ என்று குறிப்பிட்டிருந்தது.

மேலும், மத்திய நீா் வளத் துறை அமைச்சா் சி. ஆா். பாட்டீல் மற்றும் மத்திய நீா் வளத் துறை இணையமைச்சா் வி. சோமண்ணா ஆகியோா் குடியரசுத் தலைவரை சந்தித்ததாக குடியரசுத் தலைவா் அலுவலகம் வெளியிட்ட மற்றொரு பதிவில் தெரிவிக்கப்பட்டது.