மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மும்பை: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறிய விபத்தில் ஒருவர் பலி!

காரில் வந்தவர்கள் போதையில் இருந்தனரா என்று விசாரணை

News image
கோப்புப் படம்
Updated On :14 ஆகஸ்ட் 2024, 6:05 am

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறிய விபத்தில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மும்பையில் வசித்து வந்த ரிக்‌ஷா ஓட்டுநரான கணேஷ் யாதவ், மற்றொருவரான பப்லு ஸ்ரீவஸ்தவா இருவரும், ஆக. 12, திங்கள்கிழமை, அதிகாலையில் வெர்சோவா கடற்கரையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், அந்த வழியே வந்த எஸ்யூவி ரகக் கார் ஒன்று, தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறி, விபத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, தலையில் பலத்த காயமடைந்த பப்லு, கண்விழித்துப் பார்க்கையில், கணேஷின் மீது கார் ஏறி, இறங்கியிருப்பதைக் கண்டதையடுத்து, மயக்கமடைந்துள்ளார்.

இதனையடுத்து, காரை ஓட்டி வந்த நிகில் ஜாவ்லே (34), அவரது நண்பர் சுபம் டாங்ரே இருவரும் கீழிறங்கி வந்தபோது, அங்கிருந்த பொதுமக்கள் கூட்டமாகக் கூடியதால், காரில் வந்த இருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் கணேஷையும் பப்லுவையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இருப்பினும், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி கணேஷ் உயிரிழந்தார்.

இந்த நிலையில், சம்பவ இடத்தை அடைந்த காவல்துறையினர், விபத்தினை ஏற்படுத்திய நிகில், சுபம் இருவர் மீதும் கொலைக்குச் சமமான வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.

இருவரும் 5 நாள்கள் நீதிமன்றக் காவலில் உள்ள நிலையில், சம்பவத்தின்போது இருவரும் போதையில் இருந்தனரா? என்பதை அறிய, இருவரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.