பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பதவி உயர்வு!

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அமன் ஷெராவத் |ஸ்வப்னில் குசேல்

Published On :

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மல்யுத்த வீரரான அமன் ஷெராவத்துக்கு வடக்கு ரயில்வே வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) பதவி உயர்வு வழங்கி கௌரவித்து இருக்கிறது.

21 வயதான மல்யுத்த வீரர் அமன் ஷெராவத், சமீபத்தில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக்கின் ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தம் 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு, சிறப்புப் பணி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் மிகக்குறைந்த வயதில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையையும் அமன் ஷெராவத் பெற்றுள்ளார்.

நாட்டிற்கு பெருமை சேர்த்ததற்காக இந்தப் பதவி உயர்வு அமனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷு எஸ். உபாத்யாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வடக்கு ரயில்வே தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொது மேலாளர் ஷோபன் சௌத்ரி அமனை பாராட்டி பரிசு வழங்கினார். அதே நேரத்தில் வடக்கு ரயில்வேயின் முதன்மை தலைமை அதிகாரியான சுஜித்குமார் மிஸ்ரா, அமன் ஷெராவத்தை பாராட்டி, அவர் பதக்கம் வென்றதற்காக பதவி உயர்வு அளித்து, கௌரவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து உபாத்யாய் கூறும்போது, “ இந்திய ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்த வீரரான அமன் ஷெராவத், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமையையும் புகழையும் கொண்டு சேர்த்துள்ளார். அவருடைய அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவை பல லட்சக்கணக்கானவர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளித்திருக்கிறது” என்றார்.

பாரீஸ் ஒலிம்பிக்கின் போது ஷெராவத் 13-5 என்ற புள்ளிக் கணக்கில் போர்ட்டோரிக்கா ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்த வீரர் டேரியன் டோய் குரூஸை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இதேபோல, ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற மற்றொரு இந்திய வீரரான ஸ்வப்னில் குசேல், பயண டிக்கெட் பரிசோதகராக இருந்து இந்திய ரயில்வேயின் சிறப்பு அதிகாரியாக இரட்டை பதவி உயர்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.