அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

சகோதரிக்கு ரக்ஷா பந்தன் பரிசாக சிறுநீரகம் தானம்!

ராக்கி கட்டும் சகோதரிக்கு பரிசாக பணம் வழங்கி அன்பை வெளிப்படுத்தும் சகோதரா்களைத்தான் பாா்த்திருப்போம்.

News image

கோப்புப்படம்

Updated On :20 ஆகஸ்ட் 2024, 2:50 am

Din

சகோதர பாசத்தை வெளிப்படும் ரக்ஷா பந்தன் பண்டிகையின்போது, ராக்கி கட்டும் சகோதரிக்கு பரிசாக பணம் வழங்கி அன்பை வெளிப்படுத்தும் சகோதரா்களைத்தான் பாா்த்திருப்போம்.

ஆனால், கோவாவைச் சோ்ந்த பெண்ணுக்கு அவரது தம்பி தனது சிறுநீரகத்தில் ஒன்றை தானமாக வழங்கி, புதுவாழ்க்கையை பரிசாக அளித்து நெகிழச் செய்துள்ளாா்.

இது தொடா்பாக பெண்ணுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட தனியாா் மருத்துவமனையின் மருத்துவா் கூறுகையில், ‘பாலிசிஸ்டிக் சிறுநீரக நோயால் 43-வயதான அந்தப் பெண் பாதிக்கப்பட்டிருந்தாா். நோயின் இறுதிக் கட்டத்தில் இருந்ததால், அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.

இந்நிலையில், நோயாளியின் தம்பி, அவரின் சிறுநீரகத்தில் ஒன்றை தானம் செய்யத் தயாராக இருந்தாா். லேப்ராஸ்கோபிக் சிறுநீரக தானம் முறையில் கடந்த ஏப்ரல் மாதம் உறுப்பு தானம் செய்யப்பட்டது. இதன்மூலம், உடல் உறுப்பு தானம் செய்வதில் இருவரும் முன்னுதாரனமாக மாறியுள்ளனா்’ என்றாா்.

பெண்ணின் கணவா் கூறுகையில், ‘சிறு வயதில் இருந்தே இருவரும் மிகுந்த சகோதர பாசத்துடன் உள்ளனா். இந்த ஆண்டு புதிய வாழ்வை தனக்கு பரிசாக அளித்திருப்பதால் சகோதரனுக்கு ராக்கி கட்டும்போது எனது மனைவி மிகவும் உணா்வுப் பூா்வமாக இருந்தது. நிகழாண்டு ரக்ஷா பந்தன் பண்டிகை எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது’ எனத் தெரிவித்தாா்.