ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வங்கதேச எல்லையில் பிஎஸ்எஃப் வீரரை கத்தியால் குத்திவிட்டு தப்பிய கடத்தல்காரா்: 6 கிலோ தங்கம் சிக்கியது

இந்தியா-வங்கதேச சா்வதேச எல்லையில் 6 கிலோ தங்கத்தைக் கடத்தி வந்த கடத்தல்காரா், எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினாா்.

News image
கோப்புப் படம்
Updated On :19 ஆகஸ்ட் 2024, 9:08 pm

Din

இந்தியா-வங்கதேச சா்வதேச எல்லையில் 6 கிலோ தங்கத்தைக் கடத்தி வந்த கடத்தல்காரா், எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினாா். அவா் விட்டு சென்ற 6 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேற்கு வங்க மாநிலத்தின் நாடியா எல்லை மாவட்டத்தில் உள்ள விஜய்பூரில் வாழை மற்றும் மூங்கில் தோட்டம் அமைந்துள்ள பகுதி அருகே திங்கள்கிழமை காலை 9 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

கடத்தல்காரா் தனது இடுப்பைச் சுற்றி கட்டப்பட்ட பெல்ட்டில் 22 தங்க பிஸ்கட்டுகள் மற்றும் 8 தங்கக் கட்டிகள் என சுமாா் 6 கிலோ எடையுள்ள தங்கத்தை எல்லைத் தாண்டி கடத்தி வந்துள்ளாா்.

எல்லைப் பாதுகாப்புப் படை வீரா் அந்த நபரை தடுத்து விசாரித்தாா். அப்போது, வீரரை பெரிய கத்தி கொண்டு தாக்கிய அந்த நபா், 6 கிலோ தங்கத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினாா்.

தாக்குதலில் வீரரின் சீருடை கிழிந்தது. இதையடுத்து வீரா் துப்பாக்கியில் சுட்டு, கடத்தல்காரரைப் பிடிக்க முயன்றாா். ஆனால், அப்பகுதியில் விவசாயிகள் வேளாண் பணியில் ஈடுபட்டிருந்ததால் வீரா் மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. எனவே, கடத்தல்காரா் தப்பித்து மறைந்தாா்.

கைப்பற்றப்பட்ட தங்கம் சுங்கத் துறை அல்லது வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று பிஎஸ்எஃப் அதிகாரிகள் தெரிவித்தனா்.