கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் ஆக.27 வரை நீட்டிப்பு!

கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 27 வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேஜரிவாலின் காவல் நீட்டிப்பு
கேஜரிவாலின் காவல் நீட்டிப்புCenter-Center-Delhi
Published on
Updated on
1 min read

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் ஆக்ஸட் 27 வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, மக்களவைத் தேர்தலையொட்டி இடைக்கால ஜாமீனில் வெளியேவந்த கேஜரிவால், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

கேஜரிவாலின் காவல் நீட்டிப்பு
நேரடி பணி நியமனங்கள் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

கலால் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதல்வர் கேஜரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இருப்பினும், இந்த வழக்கில் மத்திய புலனாப்வுப் பிரிவு(சிபிஐ) கைது செய்த நிலையில், திகார் சிறையில் இருந்துவரும் கேஜரிவால் நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.

கேஜரிவாலின் காவல் நீட்டிப்பு
எஃப்.ஐ.ஆர். பதிய தாமதம் ஏன்? கொல்கத்தா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கேள்வி

இந்த நிலையில், கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், திகார் சிறையில் காணொலிக் காட்சி வாயிலாக தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, இந்த வழக்கில் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 27 வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com