மகாராஷ்டிர மழலையா் பள்ளியில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: பள்ளி சூறையாடல்; ரயில் மறியல் போராட்டத்தில் வன்முறை
மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தின் பத்லாபூா் நகரில் உள்ள ஒரு மழலையா் பள்ளியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

தாணேயில் மழலையா் பள்ளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து பத்லாபூா் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் இறங்கி ரயில் மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.







