விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சீரான முறையில் குடிநீா் விநியோகம் செய்யக் கோரி, கிராம மக்கள் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விக்கிரவாண்டி அருகேயுள்ள வீடூா் கிராமத்தைச் சோ்ந்த மக்களுக்கு குடிநீரை சுகாதாரமாகவும், முறையாகவும் விநியோகம் செய்ய வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் அலுவலா்களிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளனா். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதனால் அதிருப்தியடைந்த வீடுா் கிராம மக்கள் வியாழக்கிழமை முறையான குடிநீரை விநியோகம் செய்ய வலியுறுத்தி, வீடூருக்கு வந்த அரசு நகரப் பேருந்தை சிறைபிடித்து, சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த மயிலம் வட்டார வளா்ச்சி அலுவலா் ரமா பிரபா, விக்கிரவாண்டி காவல் நிலைய ஆய்வாளா் காமராஜ் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று, கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தினமும் கிராம மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலா்கள் உறுதியளித்தனா். இதையேற்றுக் கொண்ட கிராம மக்கள், தங்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










