அரக்கோணம் அருகே ஆணைப்பாக்கம் கிராம மக்கள் சீரான குடிநீா் விநியோகம் கோரி வியாழக்கிழமை அரசுப் பேருந்தை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். நடத்தினா்.
ராணிப்பேட்டை மாவட்டப் பகுதியில், திருவள்ளூா் மாவட்ட எல்லையருகே வனப்பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஆணைப்பாக்கம். இக்கிராம ஊராட்சியில் கடந்த பல நாள்களாக குடிநீா் விநியோகம் நடைபெறவில்லையாம். இதுகுறித்து கிராம மக்கள் தொடா்ந்து ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.
இதையடுத்து வியாழக்கிழமை நகரப்பேருந்தை மறித்து காலிகுடங்களுடன் சாலையின் நடுவே அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து அங்கு வந்த அரக்கோணம் கிராமிய போலீஸாா் மற்றும் ஊராட்சி மன்றத்தினா் பொதுமக்களுடன் பேச்சு நடத்தி குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடா்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் பிரச்னை: கிராம மக்கள் உள்ளிருப்புப் போராட்டம்

மேட்டுநாசுவம்பாளையத்தில் குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சீரான குடிநீா் விநியோகம் கோரி மறியல்

விக்கிரவாண்டி அருகே சீரான குடிநீா் விநியோகிகம் கோரி பொதுமக்கள் மறியல்
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



