
ராஜீவ் காந்தியின் 80வது பிறந்த நாளை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன் என கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் பகிர்ந்த பதிவில்,
உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துக் கொள்வேன். இரக்கமுள்ள ஆளுமை, நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தின் சின்னம்.
உங்கள் போதனைகள் உத்வேகம் அளிக்கின்றன என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.