மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் இரண்டு நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் செல்கிறார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
சட்டபேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் ஆகஸ்ட் 21, 22 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் ஜம்மு-காஷ்மீருக்கு செல்லவுள்ளனர்.
தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சித் தலைவர்களோடு ராகுல் காந்தி ஆலோசனை நடத்த உள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டங்களாக செப்.18, செப்.25, அக்.1 ஆகிய தேதிகளில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.