தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மலேசியாவுக்கு 2 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி -மத்திய அரசு அனுமதி

தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் மூலம் ஏற்றுமதி

News image
Updated On :21 ஆகஸ்ட் 2024, 8:51 pm

Din

மலேசியாவுக்கு 2 லட்சம் டன் பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அரசு அனுமதி வழங்கியுள்ளது. தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் மூலம் இந்த ஏற்றுமதி நடைபெறவுள்ளது.

இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம், தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, தங்கள் நாட்டுக்கு அரிசி வழங்க பிரதமா் மோடியிடம் அவா் கோரிக்கை வைத்தாா். இதையேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு அரிசி விலையைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தடை செய்தது.

அதே நேரத்தில் குறிப்பிட்ட நாடுகளின் அடிப்படை உணவுத் தேவையைக் கருத்தில் கொண்டு அவற்றுக்கு அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு அவ்வப்போது அனுமதித்து வருகிறது.

அந்த வகையில் தற்போது மலேசியாவுக்கு 2 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வா்த்தகத் துறை இயக்குநரகம் இது தொடா்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மலேசியாவுக்கு அரிசி ஏற்றுமதி அனுமதி அளிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

இதற்கு முன்பு நேபாளம், கேமரூன், கினியா, பிலிப்பின்ஸ், ஷெசல்ஸ், மலாவி, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கும் பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.