வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திரிபுராவுக்கு ரூ.40 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் மாநில அரசுக்கு உதவுவதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் 11 குழுக்கள் ராணுவம், இந்திய விமானப் படையின் நான்று ஹெலிகாப்டர்கள் ஆகியவை மத்திய அரசால் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
திரிபுராவில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சூழலைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க எஸ்டிஆர்எப்(மாநில பேரிடர் மீட்பு நிதி)யிலிருந்து மத்திய பங்காக ரூ.40 கோடியை விடுவிக்க மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
திரிபுராவில் உள்ள சகோதரிகள், சகோதரர்கள் இந்த கடினமான காலங்களில் மோடி அரசு அவர்களுடன் துணை நிற்பதை காண்பீர்கள் என்று கூறினார்.
திரிபுராவில் கடந்த சில நாள்களாகப் பெய்த தொடர் மழை, வெள்ளம், நிலச்சரிவுக்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனமழையால் வீடுகள் சேதமடைந்தால் மாநிலத்தில் உள்ள 450 நிவாரண முகாம்களில் 65,400 பேர் தஞ்சமடைந்துள்ளனர். திரிபுராவில் மழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக விவசாயிகளிடம் கொப்பரை தேங்காய், தோதாபுரி மாம்பழங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்

ரூ.60,000 கோடியில் ஐடிஐ-க்களை மேம்படுத்தும் பிஎம்-சேது திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்

இந்திய செமிகண்டக்டா் திட்டம் 2.0-க்கு ரூ.1.25 லட்சம் கோடி ஒதுக்க முன்மொழிவு; மத்திய நிதியமைச்சக குழு ஒப்புதல்









