தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பாகிஸ்தான் பகுதியில் விழுந்த இந்திய ‘ட்ரோன்’

ஜம்மு-காஷ்மீரில் பயிற்சிக்காக பறக்கவிடப்பட்ட இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான சிறிய ரக ஆளில்லா விமானம் (ட்ரோன்) பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்தது.

News image

கோப்புப்படம்

Updated On :23 ஆகஸ்ட் 2024, 9:03 pm

Din

ஜம்மு-காஷ்மீரில் பயிற்சிக்காக பறக்கவிடப்பட்ட இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான சிறிய ரக ஆளில்லா விமானம் (ட்ரோன்) பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்தது.

இது தொடா்பாக ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் கண்காணிப்பு, பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களை கண்டறிய ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பயிற்சி நோக்கத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.25 மணியளவில் ட்ரோன் பறக்கவிடப்பட்டது. பீம்பா் கலி செக்டாரில் இருந்து பறந்த அந்த ட்ரோன் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்தது. இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் பகுதிக்குள் சென்று விழுந்தது.

அதனை பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றியது அந்நாட்டு ஊடக செய்திகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, பாகிஸ்தான் தரப்பை தொடா்புகொண்ட இந்திய ராணுவம், அந்த ட்ரோனை திருப்பி அளிக்குமாறு கேட்டுக் கொண்டது என்று தெரிவித்தனா்.