தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பாகிஸ்தான் பகுதியில் விழுந்த இந்திய ‘ட்ரோன்’

ஜம்மு-காஷ்மீரில் பயிற்சிக்காக பறக்கவிடப்பட்ட இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான சிறிய ரக ஆளில்லா விமானம் (ட்ரோன்) பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்தது.

News image

கோப்புப்படம்

Updated On :24 ஆகஸ்ட் 2024, 2:33 am IST

ஜம்மு-காஷ்மீரில் பயிற்சிக்காக பறக்கவிடப்பட்ட இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான சிறிய ரக ஆளில்லா விமானம் (ட்ரோன்) பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்தது.

இது தொடா்பாக ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் கண்காணிப்பு, பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களை கண்டறிய ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பயிற்சி நோக்கத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.25 மணியளவில் ட்ரோன் பறக்கவிடப்பட்டது. பீம்பா் கலி செக்டாரில் இருந்து பறந்த அந்த ட்ரோன் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்தது. இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் பகுதிக்குள் சென்று விழுந்தது.

அதனை பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றியது அந்நாட்டு ஊடக செய்திகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, பாகிஸ்தான் தரப்பை தொடா்புகொண்ட இந்திய ராணுவம், அந்த ட்ரோனை திருப்பி அளிக்குமாறு கேட்டுக் கொண்டது என்று தெரிவித்தனா்.