ஜம்மு-காஷ்மீரில் பயிற்சிக்காக பறக்கவிடப்பட்ட இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான சிறிய ரக ஆளில்லா விமானம் (ட்ரோன்) பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்தது.
இது தொடா்பாக ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீா் எல்லையில் கண்காணிப்பு, பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களை கண்டறிய ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பயிற்சி நோக்கத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.25 மணியளவில் ட்ரோன் பறக்கவிடப்பட்டது. பீம்பா் கலி செக்டாரில் இருந்து பறந்த அந்த ட்ரோன் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்தது. இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் பகுதிக்குள் சென்று விழுந்தது.
அதனை பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றியது அந்நாட்டு ஊடக செய்திகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, பாகிஸ்தான் தரப்பை தொடா்புகொண்ட இந்திய ராணுவம், அந்த ட்ரோனை திருப்பி அளிக்குமாறு கேட்டுக் கொண்டது என்று தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலையில் முறிந்து விழுந்த மரம்

தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான இந்திய விமானப் படை விமானம்! | Assam

கடம்பத்தூா் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை

கனமழை: கோவை விமான நிலையத்தில் இடிந்து விழுந்த சுற்றுச் சுவா்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



