முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

கிருஷ்ண ஜன்மாஷ்டமி: இவர்களெல்லாம் கோயிலுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம்!

கிருஷ்ண ஜன்மாஷ்மிக்கு மக்கள் கூட்டம் குறித்து ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.

News image

மதுரா

Updated On :23 ஆகஸ்ட் 2024, 4:48 pm IST

மதுராவில் ஜென்மாஷ்டமி விழாவை முன்னிட்டு முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் நெரிசலான நேரத்தில் கோயிலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் வருடாந்திர திருவிழா ஜென்மாஷ்டமியாகும். இந்தாண்டு ஆகஸ்ட் 26 அன்று மதுராவில் உள்ள அனைத்து முக்கிய கோயில்களிலும், ஆகஸ்ட் 27 அன்று இரவு பிருந்தாவனத்தில் உள்ள பாங்கே பிஹாரி கோயிலிலும் கொண்டப்படுகிறது.

இந்த நாளில் கிருஷ்ண பக்தர்கள் அலைகடலெனத் திரண்டு கோயில் கூடுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஏராளமான பக்தர்கள் மதுராவில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் மதுராவின் பாங்கே பிஹாரி கோயிர் நிர்வாகம் ஜன்மாஷ்மிக்கு மக்கள் கூட்டம் குறித்து ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.

கிருஷ்ண ஜன்மாஷ்டமியன்று பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், அன்றைய தினம், குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோய் உள்ளவர்கள் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்குமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கோயிலுக்குள் வரும் நுழைவும், வெளியேறும் வாயில்கள் தனித்தனியாக இருப்பதால் பக்தர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், காலணிகளை நுழைவில் சென்று எடுக்க இயலாது என்றும் கூறியுள்ளது.

மேலும், பக்தர்கள் தரிசனத்திற்கு முன் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஜென்மாஷ்டமியன்று ஆரத்தி பூஜையில் பங்கேற்ற முதியவர் ஒருவர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜென்மாஷ்டமி இரவு மங்கள ஆரத்தி தரிசனத்தின்போது கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.