
பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த சத்ரபதி சிவாஜியின் சிலை, உடைந்த விவகாரத்தில் பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “ பாரதீய ஜனதா ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 4 அன்று மகாராஷ்டிரத்தின் ராஜ்கோட்டில் சத்ரபதி சிவாஜியின் சிலையை நரேந்திர மோடி திறந்து வைத்தார். சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு தற்போது மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை இடிந்து விழுந்தது. இவர்களின் ஊழலில் வரலாற்றில் இடம்பிடித்துள்ளவர்கள்கூட தப்பமுடியாத நிலையே உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
BJP सरà¤à¤¾à¤° मà¥à¤ à¤à¥à¤°à¤·à¥à¤à¤¾à¤à¤¾à¤° à¤à¤°à¤® पर हà¥à¥¤
— Congress (@INCIndia) August 26, 2024
नरà¥à¤à¤¦à¥à¤° मà¥à¤¦à¥ नॠ4 दिसà¤à¤¬à¤°, 2023 à¤à¥ महाराषà¥à¤à¥à¤° à¤à¥ राà¤à¤à¥à¤ मà¥à¤ à¤à¤¤à¥à¤°à¤ªà¤¤à¤¿ शिवाà¤à¥ महाराठà¤à¥ पà¥à¤°à¤¤à¤¿à¤®à¤¾ à¤à¤¾ à¤à¤¨à¤¾à¤µà¤°à¤£ à¤à¤¿à¤¯à¤¾à¥¤
à¤à¤¬ à¤à¤°à¥à¤¬ 8 महà¥à¤¨à¥ बाद à¤à¤¤à¥à¤°à¤ªà¤¤à¤¿ शिवाà¤à¥ महाराठà¤à¥ पà¥à¤°à¤¤à¤¿à¤®à¤¾ ढह à¤à¤à¥¤
हालात यॠहà¥à¤ à¤à¤¿ à¤à¥à¤°à¤·à¥à¤à¤¾à¤à¤¾à¤° à¤à¥ मामलॠमà¥à¤ महापà¥à¤°à¥à¤·à¥à¤ à¤à¥ à¤à¥ नहà¥à¤ बà¤à¥à¤¶à¤¾ à¤à¤¾â¦ pic.twitter.com/KLSy4Jkr8S
முன்னதாக, மகாராஷ்டிரத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மால்வானில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி கடற்படை தினத்தையொட்டி பிரதமர் மோடி சிலையை திறந்து வைத்தார். இந்த 35 அடி உயரமுள்ள சிவாஜி சிலை திங்கள்கிழமை இடிந்து விழுந்தது. கடந்த 3 நாள்களாக அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், சிலை உடைந்ததற்கான காரணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







