குஜராத்தில் நீடிக்கும் கனமழை: உயிரிழப்பு 16-ஆக அதிகரிப்பு
குஜராத்தில் நீடித்து வரும் கனமழையால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 16-ஆக அதிகரித்தது. செவ்வாய்க்கிழமை இந்த எண்ணிக்கை 7-ஆக இருந்தது.

குஜராத் மாநிலம் வதோத்ராவில் புதன்கிழமை பெய்த கன மழை காரணமாக வெள்ளக்காடாக மாறிய சாமா குடியிருப்புப் பகுதியிலிருந்து படகுகள் மூலம் மக்களை மீட்கும் ராணுவ வீரா்கள்.








