திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்வு: அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்த மமதா பானர்ஜி!

ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image

ஜெய் ஷா | அமித் ஷா | மமதா பானர்ஜி

Updated On :29 ஆகஸ்ட் 2024, 5:51 pm IST

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐஐசி தலைவரான நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லே, பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பிசிசிஐ கெளரவ செயலாளராகவும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றிய ஜெய் ஷா, டிசம்பர் 1 ஆம் தேதி ஐசிசி தலைவராக பதவியேற்கவுள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “ வாழ்த்துகள் மத்திய உள்துறை அமைச்சர்! உங்களது மகனை நீங்கள் அரசியல்வாதி ஆக்கவில்லை, அதற்கு பதிலாக அதைவிட முக்கிய பதவியான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஆக்கிவிட்டீர்கள். உங்கள் மகன் மிகவும் சக்தி வாய்ந்த தலைவராகிவிட்டார். அவரது இந்தச் சாதனைக்கு உங்களுக்குத் தான் வாழ்த்து தெரிவிக்க வேண்டும், பாராட்டுகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.