தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

கேரளம், திரிபுரா மாநிலங்களுக்கு தலா ரூ.15 கோடி நிதியுதவி: சத்தீஸ்கர் முதல்வர்!

இரு மாநிலங்களுக்கும் உதவ சத்தீஸ்கர் அரசு தயாராக உள்ளது..

News image

சத்தீஸ்கர் முதல்வர்

Updated On :30 ஆகஸ்ட் 2024, 12:50 pm IST

நிலச்சரிவு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளம், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு தலா ரூ.15 கோடி நிதியுதவி வழங்குவதாக சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் முதல்வர் அலுவலகம் வெளியிட்ட பதிவில்,

திரிபுரா மற்றும் கேரளத்திற்குப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.15 கோடி நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த சில நாள்களாக திரிபுரா மற்றும் கேரளத்தில் இயற்கை பேரிடர்களால் பெரியளவில் உயிர்கள் மற்றும் உடைமைகள் சேதம் அடைந்துள்ளது. இது மிகவும் வருந்தத்தக்கதாகும். பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பாதகமான சூழ்நிலையில் இரு மாநிலங்களுக்கும் உதவ சத்தீஸ்கர் அரசு தயாராக உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளதாக எக்ஸ் தளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.