வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

2 நாள்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று ஐஎம்டி கணித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது
Published on
Updated on
1 min read

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் அதனையொட்டிய வடக்கு வங்கக் கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான நிலையில், இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது
பாகிஸ்தானில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பலி!

இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் 2 நாள்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது
தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

இதன் காரணமாக தமிழகம் உள்பட தென் மாநிலங்களிலும், ஒடிசா மாநிலத்திலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகின்றது. ஆங்காங்கே சாரல் மழையும் பெய்து வருகின்றது. குளிர்ந்த காலநிலையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com