மேற்கு வங்க தலைமைச் செயலராக மனோஜ் பந்த் நியமனம்
மேற்கு வங்க மாநில தலைமைச் செயலராக மூத்த அதிகாரி மனோஜ் பந்த் சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.


மேற்கு வங்க மாநில தலைமைச் செயலராக மூத்த அதிகாரி மனோஜ் பந்த் சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதித்துறை செயலராக இருந்த பந்த், நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழித் துறைக்கு மாற்றப்பட்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
1991-ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான பந்த், சனிக்கிழமை ஓய்வு பெறும் பகவதி பிரசாத் கோபாலிகாவுக்குப் பிறகு பதவியேற்கிறார்.
அதேசமயம் மனோஜ் பந்த் வகித்த நிதித்துறை செயலர் பதவிக்கு பிரபாத் குமார் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மே 31 அன்று ஓய்வு பெறவிருந்த 1989-ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி கோபாலிகாவுக்கு மூன்று மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...