ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மேற்கு வங்க தலைமைச் செயலராக மனோஜ் பந்த் நியமனம்

மேற்கு வங்க மாநில தலைமைச் செயலராக மூத்த அதிகாரி மனோஜ் பந்த் சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2024, 3:03 pm

DIN

மேற்கு வங்க மாநில தலைமைச் செயலராக மூத்த அதிகாரி மனோஜ் பந்த் சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதித்துறை செயலராக இருந்த பந்த், நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழித் துறைக்கு மாற்றப்பட்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

1991-ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான பந்த், சனிக்கிழமை ஓய்வு பெறும் பகவதி பிரசாத் கோபாலிகாவுக்குப் பிறகு பதவியேற்கிறார்.

அதேசமயம் மனோஜ் பந்த் வகித்த நிதித்துறை செயலர் பதவிக்கு பிரபாத் குமார் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மே 31 அன்று ஓய்வு பெறவிருந்த 1989-ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி கோபாலிகாவுக்கு மூன்று மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.