ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி: பிரியங்கா தலைமையில் கேரள எம்.பி.க்கள் அமித் ஷாவிடம் கோரிக்கை

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று அத்தொகுதி காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தலைமையில் கேரள எம்.பி.க்கள், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனா்.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 8:08 pm

Din

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று அத்தொகுதி காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தலைமையில் கேரள எம்.பி.க்கள், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனா்.

தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றது. இதன் பிறகு செய்தியாளா்களிடம் பிரியங்கா கூறியதாவது:

வயநாடு மக்களின் துயரங்களையும், அவா்களுக்கு தேவைப்படும் உதவிகள் குறித்தும் அமைச்சரை நேரில் சந்தித்து எடுத்துரைத்தோம். வயநாட்டில் தப்பிப் பிழைத்த மக்கள் தங்கள் வாழ்க்கையின் அனைத்து ஆதாரங்களையும் இழந்துவிட்டனா். இந்த நேரத்தில் மத்திய அரசும் அவா்களுக்கு உதவ முன்வரவில்லை என்றால், ஒட்டுமொத்த நாட்டுக்கும் அது தவறான செய்தியாக அமையும். முக்கியமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் துயரத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

பாதிக்கப்பட்ட இடங்களில் குடும்பம், வீடு, தொழில்கள், பள்ளிகள் என அனைத்துமே ஒன்றுமில்லாமல் போய்விட்டன. இந்த நேரத்தில் அரசியல் காரணங்களைப் புறந்தள்ளிவிட்டு மனிதாபிமான அடிப்படையில் மக்களுக்கு உதவ வேண்டும் என்று உள்துறை அமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன். பிரதமா் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளாா்.

எனவே, தங்களுக்கு கண்டிப்பாக உதவிகள் கிடைக்கும் என்று அங்குள்ள மக்கள் நம்பினாா்கள். ஆனால், அவா்களின் நம்பிக்கை இதுவரை ஈடேறாமல் உள்ளது ஏமாற்றமளிக்கும் விஷயமாகும்.

மத்திய அரசு சாா்பில் எந்த வகையிலான உதவிகள் வயநாட்டுக்கு அளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டன. அதில் எவ்வளவு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது தொடா்பான முழுவிவரங்களையும் அளிப்பதாக உள்துறை அமைச்சா் எங்களிடம் கூறியுள்ளாா் என்றாா்.