விவசாயிகள் மீது காவல்துறை பூ மழை! போராட்டத்தில் சுவாரசியம்!

கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி கலைக்கப்பட்ட விவசாயிகள் மீது பூ வீசிய காவல்துறை
விவசாயிகள் மீது காவல்துறை பூ மழை! போராட்டத்தில் சுவாரசியம்!
PTI
Published on
Updated on
1 min read

‘தில்லி செல்வோம்(தில்லி சலோ)’ என்ற முழக்கத்துடன் விவசாயிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் மற்றும் பேரணியில் சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

பஞ்சாப் - ஹரியாணா எல்லையான ஷம்பு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கலைந்து செல்ல அறிவுறுத்திய காவல்துறையினர், விநோதமான முயற்சியை கையிலெடுத்தனர். விவசாயிகள் மீது காவல்துறையினர் பூக்களை வீசி அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

வேளாண் பயிா்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com