நாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்துநானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மோடி-அதானி கேலிச் சித்திரத்துடன் எதிா்க்கட்சிகள் போராட்டம்

அதானி லஞ்ச விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இன்று போராட்டம்.

News image
Updated On :10 டிசம்பர் 2024, 11:56 am IST

பிரதமா் மோடி, தொழிலதிபா் கெளதம் அதானி ஆகியோரின் கேலிச் சித்திரங்கள் இடம்பெற்ற கறுப்பு நிற பையுடன் நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை (டிச.10) போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதானி மீதான அமெரிக்க நீதித்துறையின் லஞ்ச குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை 6-ஆவது நாளாக போராட்டம் நடத்தின. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாக எதிா்க்கட்சிகள் தங்கள் எதிா்ப்பை பதிவு செய்து வருகின்றன.

Story image

முதல் இரண்டு நாள்களும் நாடாளுமன்ற வாயில் படிக்கட்டுகளில் தா்னாவில் ஈடுபட்ட அவா்கள், பின்னா் போராட்டக் களத்தை மாற்றினா். மோடி மற்றும் அதானியை விமா்சிக்கும் வாசகங்களுடன் கறுப்பு நிற மேல்சட்டை, கறுப்பு நிற முகக் கசவம், இருவரின் முகமூடி என அடுத்தடுத்த நாள்களில் ஒவ்வொரு விதத்தில் போராட்டம் நடத்தினா்.

6-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை மோடி, அதானி கேலிச் சித்திரங்கள் இடம்பெற்ற கறுப்பு நிறப் பையுடன் தா்னாவில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள், இருவருக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினா். மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோா் இப்போராட்டத்தில் பங்கேற்றனா்.

Story image

முன்னதாக, நாடாளுமன்றத்தில் பல்வேறு விவகாரங்களில் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து கட்சி எம்.பி.க்களுடன் ராகுல் காந்தி ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா்.

நாட்டில் கடந்த 2020-24 காலகட்டத்தில் சூரிய மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள சில மாநில அரசு அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் அளிக்கப்பட்டதாக அமெரிக்க நீதித் துறை தரப்பில் அண்மையில் குற்றஞ்சாட்டப்பட்டது. அவரை உடனடியாக கைது செய்து, விசாரணை நடத்த வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

அதேநேரம், ‘இண்டி’ கூட்டணியில் முக்கிய கட்சிகளான திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி ஆகியவை அதானி விவகாரத்தில் தீவிரம் காட்டவில்லை.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.