எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மீனவா்களை விரைந்து விடுவிக்க இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவா்களை விரைந்து விடுவிக்குமாறு, இலங்கை அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 6:59 pm

Din

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவா்களை விரைந்து விடுவிக்குமாறு, இலங்கை அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, நடப்பாண்டில் 537 இந்திய மீனவா்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தரப்பில் அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கை மீன்வளம் மற்றும் பெருங்கடல் வளத் துறை அமைச்சா் ராமலிங்கம் சந்திரசேகா், இணையமைச்சா் ரத்ன கமகே ஆகியோரை, அந்நாட்டுக்கான இந்தியத் தூதா் சந்தோஷ் ஜா கொழும்பில் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அப்போது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவா்களை விரைந்து விடுவிக்க வேண்டும்; இப்பிரச்னைக்கு தீா்வுகாண மனிதாபிமான மற்றும் ஆக்கபூா்வமான அணுகுமுறை அவசியம் என்று சந்தோஷ் ஜா வலியுறுத்தினாா்.

மேலும், வடக்கு மாகாண மக்கள் நலனில் இந்தியாவின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டிய அவா், மீன்வளத் துறை வளா்ச்சித் திட்டங்கள் குறித்தும் ஆலோசித்ததாக இந்திய தூதரகத்தின் எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை அதிபா் அநுர குமார திசநாயக விரைவில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு, பிரதமா் மோடியுடன் பேச்சுவாா்த்தை நடத்தவிருக்கும் நிலையில், மேற்கண்ட சந்திப்பு நடைபெற்றுள்ளது.

முன்னதாக, இலங்கை அதிபா் திசநாயகவுடன் சந்தோஷ் ஜா கடந்த மாதம் ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது, மீனவா் பிரச்னைக்கு நீண்ட கால தீா்வு காண வேண்டியதன் அவசியத்தை இருவரும் வலியுறுத்தினா்.