உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

தில்லியில் மிகக்குறைந்த வெப்பநிலை பதிவு!

தில்லியில் மிகக்குறைந்தளவிலான வெப்பநிலை பதிவாகியுள்ளது.

பனிவிழும் காலை பொழுது - படம் | ஏஎன்ஐ

Published On :12 டிசம்பர் 2024, 11:39 am IST

தில்லியில் மிகக்குறைந்தளவிலான வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோடைகாலங்களில் 50 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி வந்த நிலையில் தற்போது மிகக்குறைந்த வெப்ப நிலை பதிவாகியுள்ளது.

தில்லியில் வியாழக்கிழமையன்று குளிர்காலத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை 4.5 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. அயநகர் மற்றும் புசா உள்ளிட்ட இடங்களில் முறையே 3.8 மற்றும் 3.2 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை குறைந்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு நிலையம் கூறுகையில், “வெப்பநிலை 4 டிகிரிக்கும் கீழே குறையும் போது குளிர் அலைகள் உருவாகின்றன. தில்லியில் புதன்கிழமையான நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 4.9 டிகிரி செல்சியஸாக இருந்தது” எனக் கூறினர்.

கடந்த 14 ஆண்டுகளில் முதல் முறையாக டிசம்பர் மாத தொடக்கத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸுக்கு கீழ் பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முந்தையகால தரவுகளின்படி, டிசம்பர் மாத காலகட்டத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி 4.1 டிகிரி செல்சியஸ் பதிவானதே இன்று வரை மிகக்குறைந்தபட்சமாக நீடிக்கிறது.

24 மணி நேர சராசரி காற்று தரக்குறியீடு புதன்கிழமை 199 ஆக இருந்த நிலையில், வியாழக்கிழமை காலை 9 மணிக்கு காற்று தரக்குறியீடு 262 ஆக உயர்ந்து மோசமான நிலையை எட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.