வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

சீதாவாக நடிக்க அசைவம் சாப்பிடவில்லையா? ஆவேசமான சாய் பல்லவி!

நடிகை சாய் பல்லவி பொய்யான தகவல்கள் குறித்து எச்சரித்துள்ளார்...

News image
Updated On :12 டிசம்பர் 2024, 11:24 am IST

தவறான தகவல்களை பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என நடிகை சாய் பல்லவி எச்சரித்துள்ளார்.

நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்தியளவில் கவனம் பெற்றார். தொடர்ந்து, தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து தனக்கென நல்ல வணிகத்தை உருவாக்கினார்.

முக்கியமாக, ஷ்யாம் சிங்கா ராய் மற்றும் விராத பர்வம் படங்களில் தன் நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்றார். இயக்குநர் மணிரத்னம் தனக்குப் பிடித்த நாயகி என பேசும் அளவிற்கு கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இறுதியாக, இவர் நடித்த அமரன் திரைப்படம் இந்தியளவில் கவனிக்கப்பட்டதுடன் ரூ. 300 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. அப்படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கலங்கடித்தார் சாய் பல்லவி.

அடுத்ததாக, மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ’ராமாயணா’ படத்தில் சீதாவாக நடிக்கிறார். இதில் ரன்பீர் கபூர் ராமராகவும், யஷ் இராவணனாகவும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், பிரபல சினிமா இணைய இதழ் ஒன்று, “சாய் பல்லவி ராமாயணா படத்தில் சீதாவாக நடிப்பதால் அசைவம் சாப்பிடுக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். படப்பிடிப்பு முடியும்வரை உணவகங்களில் சாப்பிடாமல் எங்கு சென்றாலும் இவர் அழைத்துச் செல்லும் சமையல்காரர்கள் சமைக்கும் சைவ உணவையே சாப்பிடுகிறார்” எனத் தெரிவித்திருந்தது.

இதைப் பகிர்ந்த சாய் பல்லவி, “நோக்கத்துடனோ அல்லது நோக்கமில்லாமலோ (கடவுள் அறிவார்) கூறப்படும் ஆதாரமற்ற புரளிகளுக்கும், பொய்களுக்கும், தவறான கூற்றுகளுக்கும் நான் எப்போதும் அமைதியாகவே இருந்திருக்கிறேன். ஆனால், இது தொடர்ந்து நடந்துகொண்டே இருப்பதால் இப்போது எதிர்வினையாற்ற வேண்டியுள்ளது. இனிமேல் என்னைப் பற்றிய கட்டுக் கதைகளை, புரளிகளை எந்தவொரு ஊடகமோ, தனிநபரோ பரப்பினால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சாய் பல்லவியின் இக்கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.