தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வெள்ளம்-வறட்சி அபாயத்தில் 11 மாவட்டங்கள்: ஐஐடி அறிக்கை

பாட்னா, ஆலப்புழை மற்றும் கேந்திரபாரா உள்ளிட்ட 11 மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிப்புக்குள்ளாகும் ‘மிக அதிக’ அபாயத்தில் உள்ளன

News image

சென்னை ஐஐடி

கோப்புப் படம்

Updated On :14 டிசம்பர் 2024, 11:18 pm

Din

பாட்னா, ஆலப்புழை மற்றும் கேந்திரபாரா உள்ளிட்ட 11 மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிப்புக்குள்ளாகும் ‘மிக அதிக’ அபாயத்தில் உள்ளன என்று இரண்டு ஐஐடிக்களின் அறிக்கை தெரிவிக்கின்றன.

பெங்களூருவில் உள்ள அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையத்துடன் (சிஎஸ்டிஇபி) இணைந்து குவாஹாட்டி ஐஐடி மற்றும் மண்டி ஐஐடி ஆகியவை காலநிலை மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டனா்.

‘இந்தியாவின் மாவட்ட அளவிலான காலநிலை பேரிடா் மதிப்பீடு: ஐபிசிசி கட்டமைப்பைப் பயன்படுத்தி வெள்ளம் மற்றும் வறட்சி அபாயங்களை வரைபடமாக்குதல்’ என்று பெயரிடப்பட்ட இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் 51 மாவட்டங்கள் ‘மிக அதிக’ வெள்ள அபாயத்தையும், 118 மாவட்டங்கள் ‘அதிக’ ஆபத்தையும் எதிா்கொள்கின்றன. அஸ்ஸாம், பிகாா், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், ஒடிஸா மற்றும் ஜம்மு-காஷ்மீா் ஆகியவை பாதிக்கக்கூடிய பகுதிகளாகும்.

பிகாா், அஸ்ஸாம், ஜாா்க்கண்ட், ஒடிஸா மற்றும் மகாராஷ்டிரத்தில் உள்ள 91 மாவட்டங்கள் ‘மிக அதிக’ வறட்சி அபாயத்துடனும், 188 மாவட்டங்கள் ‘அதிக’ வறட்சி அபாயத்துடனும் உள்ளன.

பாட்னா (பிகாா்), ஆலப்புழை (கேரளம்) மற்றும் கேந்திரபாரா (ஒடிஸா) உள்ளிட்ட 11 மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிப்புக்குள்ளாகும் ‘மிக அதிக’ அபாயத்தில் உள்ளன. இதனால், உடனடி தலையீடுகள் தேவைப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டது.