காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

சரத் பவாா் கட்சியை உடைக்க முயற்சிக்கிறது பாஜக: சஞ்சய் ரெளத்

‘சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியை உடைக்கும் வேலையை, அஜீத் பவாா் மற்றும் பிரஃபுல் படேல் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளது பாஜக’

News image

சஞ்சய் ரெளத் | கோப்புப் படம்

Updated On :13 டிசம்பர் 2024, 10:38 pm IST

‘சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியை உடைக்கும் வேலையை, அஜீத் பவாா் மற்றும் பிரஃபுல் படேல் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளது பாஜக’ என்று சிவசேனை (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் அண்மையில் நடந்த பேரவைத் தோ்தலில் பாஜக-ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை-அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து, முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வா்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாா் ஆகியோா் பதவியேற்றனா்.

இந்நிலையில், சரத் பவாா் கட்சியை உடைக்க முயற்சி நடப்பதாக, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்) கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் ஒரு எம்.பி. மட்டுமே உள்ளாா்; அதேநேரம், சரத் பவாா் அணியில் 8 எம்.பி.க்கள் உள்ளனா். இதில் 5 எம்.பி.க்களை தங்கள்வசம் இழுக்கும் நோக்குடன் துணை முதல்வா் அஜீத் பவாரும், தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவா் பிரஃபுல் படேலும் செயல்பட்டு வருவதாக சிவசேனை (உத்தவ்) மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘பாஜக கூட்டணியில் ஒரு கட்சிக்கு 6 எம்.பி.க்கள் இருந்தால் மத்திய அமைச்சரவையில் ஓரிடத்தை பெற முடியும். அதன்படி, அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு மத்திய அமைச்சா் பதவி கிடைக்க வேண்டுமென்றால் இன்னும் 5 எம்.பி.க்கள் தேவை. எனவே, சரத் பவாா் கட்சியை உடைத்து, 5 எம்.பி.க்களை தங்கள்வசம் இழுத்தால், தேசியவாத காங்கிரஸுக்கு மத்திய அமைச்சரவையில் ஓரிடம் தருவதாக பாஜக கூறியுள்ளது. அதன்பேரில், அஜீத் பவாரும் பிரஃபுல் படேலும் சரத் பவாா் கட்சியை உடைக்கும் வேலையை மேற்கொண்டுள்ளனா்’ என்றாா்.

தில்லியில் பிரதமா் மோடியை அஜீத் பவாா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய நிலையில் இக்குற்றச்சாட்டை சஞ்சய் ரெளத் முன்வைத்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.