கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சரத் பவாா் கட்சியை உடைக்க முயற்சிக்கிறது பாஜக: சஞ்சய் ரெளத்

‘சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியை உடைக்கும் வேலையை, அஜீத் பவாா் மற்றும் பிரஃபுல் படேல் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளது பாஜக’

News image

சஞ்சய் ரெளத் | கோப்புப் படம்

Updated On :14 டிசம்பர் 2024, 12:00 am

Din

‘சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியை உடைக்கும் வேலையை, அஜீத் பவாா் மற்றும் பிரஃபுல் படேல் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளது பாஜக’ என்று சிவசேனை (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் அண்மையில் நடந்த பேரவைத் தோ்தலில் பாஜக-ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை-அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து, முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வா்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாா் ஆகியோா் பதவியேற்றனா்.

இந்நிலையில், சரத் பவாா் கட்சியை உடைக்க முயற்சி நடப்பதாக, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்) கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் ஒரு எம்.பி. மட்டுமே உள்ளாா்; அதேநேரம், சரத் பவாா் அணியில் 8 எம்.பி.க்கள் உள்ளனா். இதில் 5 எம்.பி.க்களை தங்கள்வசம் இழுக்கும் நோக்குடன் துணை முதல்வா் அஜீத் பவாரும், தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவா் பிரஃபுல் படேலும் செயல்பட்டு வருவதாக சிவசேனை (உத்தவ்) மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘பாஜக கூட்டணியில் ஒரு கட்சிக்கு 6 எம்.பி.க்கள் இருந்தால் மத்திய அமைச்சரவையில் ஓரிடத்தை பெற முடியும். அதன்படி, அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு மத்திய அமைச்சா் பதவி கிடைக்க வேண்டுமென்றால் இன்னும் 5 எம்.பி.க்கள் தேவை. எனவே, சரத் பவாா் கட்சியை உடைத்து, 5 எம்.பி.க்களை தங்கள்வசம் இழுத்தால், தேசியவாத காங்கிரஸுக்கு மத்திய அமைச்சரவையில் ஓரிடம் தருவதாக பாஜக கூறியுள்ளது. அதன்பேரில், அஜீத் பவாரும் பிரஃபுல் படேலும் சரத் பவாா் கட்சியை உடைக்கும் வேலையை மேற்கொண்டுள்ளனா்’ என்றாா்.

தில்லியில் பிரதமா் மோடியை அஜீத் பவாா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய நிலையில் இக்குற்றச்சாட்டை சஞ்சய் ரெளத் முன்வைத்துள்ளாா்.