காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியில் விளிம்பில் உள்ளதாக கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக எம்.பி.யுமான பசவராஜ் பொம்மை விமர்சித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் செய்தியாளர்களுடன் பசவராஜ் பொம்மை பேசியதாவது,
பாபாசாகேப் அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்தது. இதன் விளைவாக அப்போதைய பிரதமர் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர் விலகினார்.
தற்போது காங்கிரஸ் கட்சி அழிவின் விளிம்பில் உள்ளது. அவர்களின் பாரம்பரியம் என்ன என்பது அம்பலமானது. குறிப்பாக நாடாளுமன்றத்தில் அம்பலமாகியுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தியது. அம்பேத்கரை தவறாக சித்திரித்தது என காங்கிரஸ் கட்சி அம்பலமாகியுள்ளது.
இதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக காங்கிரஸ் கட்சி தனது சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. காங்கிரஸ் மறுபரிசீலனை செய்து மக்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இல்லையென்றால் காங்கிரஸ் கட்சியை மக்கள் மறக்க வேண்டிய நேரம் வந்துவிடும் எனக் குறிப்பிட்டார்.
அரசியல் நிா்ணய சபையால் அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன் 75 ஆண்டுகள் நிறைவை ஒட்டி, மாநிலங்களவையில் நடைபெற்ற 2 நாள் விவாதத்தின் நிறைவாகப் பேசிய அமித் ஷா,
அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்.
அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பாரதிய ஜனதா கட்சி மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் பேச வேண்டும்” என்று விமர்சித்திருந்தார்.
இதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும், அபேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கர்நாடக அமைச்சரவை எப்போது விரிவாக்கம்? உறுப்பினர்கள் இடையே மீண்டும் போட்டி!

மேக்கேதாட்டு விவகாரத்தில் கருத்துகள் முக்கியமில்லை! தமிழக காங்கிரஸ் எதிர்ப்புக்கு கர்நாடக அமைச்சர் பதில்!

கர்நாடக மேலவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களித்த பாஜக எம்எல்ஏக்கள்! மாநில தலைவருக்கு நிதின் நபின் சம்மன்!






