திமுக - காங்கிரஸ் இடையிலான தேர்தலுக்குப் பிறகான அதிருப்திகள் விரைவில் சரி செய்யப்படும் என கர்நாடக காங்கிரஸ் எம்.பி. சையத் நசீர் இன்று (ஜூன் 8) தெரிவித்தார்.
இந்தியா கூட்டணிக் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுடன் சையத் நசீர் பேசியதாவது:
''திமுக என்றுமே இந்தியா கூட்டணியின் அங்கமாகவே இருந்துள்ளது. தேர்தலுக்குப் பிறகான சில மாற்றங்களால் அதிருப்தி இருக்கலாம். ஆனால், இறுதியில் அவர்கள் இந்த கூட்டணியின் நடவடிக்கைகளுக்கு உடன்படுவார்கள் என்று நம்புகிறேன்.
அவர்கள் தற்போது இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்காததால், அவர்களுக்கு அழைப்பு வரவில்லை. இருப்பினும் அவர்கள் கூட்டணியில் இணைந்தவுடன் அடுத்தடுத்த கூட்டங்களில் பங்கேற்பார்கள்.
தேர்தல் கண்ணோட்டத்திற்காக இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெறவில்லை. சமீபத்திய அரசியல் நகர்வுகள், மக்கள் பிரச்னைகள், நாட்டிற்கான சவால்கள் குறித்து விவாதித்தோம். சில முடிவுகள் எடுக்கப்பட்டு அவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டாக இதனைச் செய்கிறது. தேசிய அளவில் 5 அம்ச செயல்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நாடு தழுவிய அளவில் இதனை ஒருங்கிணைக்கவுள்ளோம். ஆலோசனைக் கூட்டங்கள் மூலம் தேசிய அளவில் பிரச்னைகளை கவனம்பெறச் செய்வோம்'' எனக் குறிப்பிட்டார்.
Summary
DMK Congress post-poll resentment will be resolved: Cong MP Syed Naseer Hussain
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக இல்லை! இந்தியா கூட்டணியில் யார் யார்?

சொல்லப் போனால்... நம்பிக்கையில்லா கூட்டணி! என்ன செய்யப் போகிறார்கள்?
இந்தியா கூட்டணி இறந்து புதைக்கப்பட்டு விட்டது: பாஜக

கர்நாடக முதல்வர் விரைவில் மாற்றம்? - “காலம் பதில் சொல்லும்!” -டி. கே. சிவகுமார்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP




