மகாராஷ்டிரத்தில் பல மாதங்களாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை புஷ்பா 2 திரைப்பட திரையரங்கில் காவல்துறையினர் கைது செய்தனர்.
மகாராஷ்டிரத்தில் விஷால் மெஷ்ரம் என்பவர் மீது 2 கொலை, போதைப்பொருள் கடத்தல் உள்பட 27 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. காவல் அதிகாரியைத் தாக்கியதாகவும் இவர் மீது வழக்குகள் உள்ளன. இவர், கடந்த 10 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இவரது நடவடிக்கைகளை சைபர் காவல்துறையினர் நீண்ட காலமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படத்துக்கு விஷால் செல்லவிருப்பதாக காவல்துறையினருக்கு உறுதிசெய்யப்பட்ட தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, புஷ்பா 2 திரைப்படம் பார்ப்பதற்காக திரையரங்கு சென்று கொண்டிருந்த விஷாலை காவல்துறையினர் பின்தொடர்ந்தனர்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... அதானியில் தொடங்கி அம்பேத்கர் வரை!
மேலும், திரையரங்கினுள் விஷால் சென்றவுடன், அவர் தப்பிப்பதைத் தவிர்க்கும் வகையில், விஷாலின் காரின் சக்கரங்களையும் காவல்துறையினர் கழற்றினர்.
இதனைத் தொடர்ந்து, திரையரங்கினுள் புஷ்பா 2 திரைப்படத்தைக் கண்டு கொண்டிருந்த விஷாலை காவல்துறையினர் சுற்றி வளைத்து, கையும்களவுமாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். புஷ்பா 2 திரைப்படமும் ஒரு கடத்தல்காரர் குறித்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெள்ளிச்சுடரே பாடல்!

நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!

மேஜிக் செய்வதாக கூறி தங்க மோதிரம் திருட்டு: மகாராஷ்டிரத்தில் ஒருவர் கைது

கைது, கையடைவு, காவல் வைப்புக் கட்டளை - ஓர் அறிமுகம்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


