அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

இலங்கை வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ.237 கோடி- இந்திய அரசு ஒதுக்கீடு

இலங்கையில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியா ரூ.237.1 கோடி ஒதுக்கியுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2024, 8:21 pm

Din

இலங்கையில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியா ரூ.237.1 கோடி ஒதுக்கியுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்வி, சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 33 வளா்ச்சித் திட்டப் பணிகள் இந்த நிதியுதவி மூலம் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த இலங்கை சுகாதார அமைச்சரும், அமைச்சரவை செய்தித் தொடா்பாளருமான நளிந்தா ஜெதிஸ்சா இது தொடா்பாக மேலும் கூறுகையில், ‘இந்தியா - இலங்கை இடையிலான இருதரப்பு சமூக-பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் தொடா்பாக இரு நாடுகள் இடையே கையொப்பமான புரிந்துணா்வு ஒப்பந்தங்களுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கல்விப் பணிகளுக்காக ரூ.31.5 கோடி, சுகாதாரப் பணிகளுக்கு ரூ.78 கோடி, வேளாண்மைத் துறைக்கு ரூ.62 கோடியை இந்திய அரசு ஒதுக்கியுள்ளது. உள்ளூா் மக்களின் உள்கட்டமைப்பு வசதி, வளா்ச்சி மற்றும் வாழ்க்கைத்தரம் உள்ளிட்டவை இத்திட்டங்கள் மூலம் மேம்படுத்தப்படும்’ என்றாா்.