கொல்கத்தா: கொல்கத்தாவில் ஆர்ஜி கர் மருத்துவமனையில், பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர், பலாத்காரம் செய்யப்படுவதை எதிர்த்துப் போராடியதற்கான ஆதாரம் சம்பவ இடத்தில் இல்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், பெண் மருத்துவரின் பெற்றோரி புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனு ஜன. 2ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது.
ஆக.9ஆம் தேதி முதுகலை மருத்துவம் பயின்று வந்த பெண் மருத்துவர், மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். மேற்கு வங்கத்தையே உலுக்கியிருந்த இந்த சம்பவத்தை எதிர்த்து மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த சம்பவத்தில், தொடக்கம் முதலே விசாரணையிலும், பெற்றோருக்குத் தகவல் கொடுப்பதிலும் பல முரண்பாடுகள் இருந்த நிலையில், தற்போது பெண் மருத்துவர், பலாத்காரத்துக்கு எதிராகப் போராடிய ஆதாரம் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது பெற்றோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடுவானில் விமானம் கீழிறங்கிய சம்பவம்: ஏா் இந்தியாவின் அனைத்து விமானிகளுக்கும் போதைப் பொருள் பரிசோதனை தொடக்கம்
அவைக்கு வர அமித் ஷாவுக்குத் துணிச்சல் இல்லை: ராகுல் விமர்சனம்!

மாமல்லன் நீர்த்தேக்கம் திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

மன நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல், அவசர கால சிகிச்சை பற்றி சட்டம் சொல்வதென்ன?
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


