சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணிப்பூா்: இம்பால் பள்ளத்தாக்கில் முழு அடைப்பு போராட்டம்!

மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள 5 மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம்

News image
கோப்புப்படம்
Updated On :28 டிசம்பர் 2024, 11:30 pm

Din

மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள 5 மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தௌபால் மாவட்டத்தில் கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி காவல்துறையினா் மேற்கொண்ட நடவடிக்கையில் ஆயுதமேந்திய 6 போ் கைது செய்யப்பட்டனா். காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து 24 மணி நேர முழு அடைப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கியது. பல மைதேயி அமைப்புகளின் கூட்டமைப்பான மணிப்பூா் ஒருமைப்பாடு ஒருங்கிணைப்புக் குழுவின் மாணவா்கள் மற்றும் பெண்கள் பிரிவுகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவளித்தன.

இதனால் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள 5 மாவட்டங்களில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. பொது வாகன சேவைகள் நிறுத்தப்பட்டன. இம்பால் மேற்கில் உள்ள லாம்பெல் சனகீத்தேல் பகுதியில் டயா்களை எரித்து போராட்டக்காரா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விஷ்ணுபூா் மாவட்டத்தில், சாலைகளில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இது தொடா்பாக காவல்துறையினா் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட 6 பேரும், கொல்லப்பட்ட ஒருவரும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினா்கள். மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் அவா்கள் ஈடுபட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து திருடப்பட்ட பொருள்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன’ என தெரிவித்தனா்.

ஆனால், கைது செய்யப்பட்டவா்கள் கிராம தன்னாா்வலா்கள் எனவும் ஆயுதமேந்திய குகி பயங்கரவாதிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்து வந்தனா் எனவும் போராட்டக்காரா்கள் கூறினா்.

கிழக்கு இம்பால் தாக்குதலுக்கு முதல்வா் கண்டனம்: மணிப்பூரின் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள தம்னபோக்பி மற்றும் சனசாபி பகுதிகளில் குகி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு மாநில முதல்வா் என்.பிரேன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

தம்னபோக்பி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு குகி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவா் காயமடைந்தாா். சனசாபியில் சனிக்கிழமை காலை நடைபெற்ற தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரா் உள்பட இருவா் காயமடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.