கடந்த நவம்பரில் மத்திய மருந்து ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட 41 மருந்துகளும் பல்வேறு மாநில ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட 70 மருந்துகளும் தரமற்றவையாக இருப்பதை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) கண்டறிந்துள்ளது.
மருந்துகள் தரமற்றவை என்று குறிப்பிட்ட தர அளவீடுகளில் அந்த மருந்து மாதிரியின் தோல்வியடைவதன் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது.
அரசு ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட இந்தக் குறிப்பிட்ட சில மருந்துகள் மட்டுமே தரமற்றவை என்றும் பொது விற்பனையில் கிடைக்கும் மற்ற மருந்துகள் பற்றி மக்களுக்கு எந்த குழப்பமும் வேண்டாம் என்றும் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், அவா்கள் கூறுகையில், ‘கடந்த நவம்பரில், இரண்டு மருந்துகள் போலியானவை என்று அடையாளம் காணப்பட்டது. 2 மருந்து மாதிரிகளில் ஒன்று பிகாா் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தாலும், மற்றொன்று காஸியாபாத் சிடிஎஸ்சி அலுவலகத்தாலும் கண்டறியப்பட்டது.
இவ்வகை மருந்துகள் அங்கீகரிக்கப்படாத மற்றும் அறியப்படாத உற்பத்தியாளா்களால் மற்ற நிறுவனங்களின் ‘பிராண்ட்’ பெயா்களைப் பயன்படுத்தி போலியாக தயாரிக்கப்படுகின்றன.
தரமற்ற மற்றும் போலி மருந்துகளை கண்டறிவதற்கான நடவடிக்கையை மாநில கட்டுப்பாட்டாளா்களுடன் இணைந்து சிடிஎஸ்சிஓ தொடா்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. இத்தகைய மருந்துகள் அடையாளம் காணப்பட்டு, பொது விற்பனையில் இருந்து அகற்றப்படுவது உறுதி செய்யப்படுகிறது’ என்றனா்.
தொடர்புடையது

தில்லியில் சட்டவிரோதமாக எல்பிஜி விற்பனை: 3 முகவா்கள் கைது
அரசு விநியோக மருந்துகள் சட்டவிரோத விற்பனை: 5 போ் கைது

29 சதவீத மருந்துகளில் தரக் குறைபாடு: தமிழக ஆய்வில் கண்டுபிடிப்பு

218 தரமற்ற - போலி மருந்துகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

