தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஆளுநரை சந்திக்கிறார் சம்பயி சோரன்!

சம்பயி சோரன் ஜாா்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை இன்று மாலை 5.30 மணிக்கு சந்திக்கிறார்.

News image

சம்பயி சோரன் (கோப்புப்படம்)

Updated On :1 பிப்ரவரி 2024, 10:37 am

சம்பயி சோரன் ஜாா்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை இன்று மாலை 5.30 மணிக்கு சந்திக்கிறார்.

பெரும்பாண்மையை நிரூபிக்க ஆளுநரை சந்திக்க அனுமதிக் கேட்டு சம்பயி சோரன் முன்னதாக கடிதம் எழுதியிருந்தார். அவர் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும், மாநிலத்தின் நிலையான ஆட்சியை வழங்கும் திறன் உள்ளதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சம்பாய் சோரன் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கி, ஆட்சியமைக்க உரிமை  கோரவுள்ளார். 

சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறை புதன்கிழமை சுமாா் 7 மணி நேரம் விசாரணை நடத்தியதைத் தொடா்ந்து, ஜாா்க்கண்ட் முதல்வா் பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் ராஜிநாமா செய்தாா். அதன் பின்னா் அமலாக்கத் துறையினா் அவரை உடனடியாக கைது செய்தனா்.

புதிய முதல்வராக ஹேமந்த் சோரனின் நம்பிக்கைக்குரியவரும், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சருமான சம்பயி சோரன் தோ்வு செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.