ஹிமாசலில் கடும் பனிப்பொழிவு காரணமாக 504 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. மாநிலத்தில் 4 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட மொத்தம் 504 சாலைகள் மூடப்பட்டுள்ளன.
சிம்லாவில் 161 சாலைகள், லாஹவுஸ்-ஸ்பிடியில் 153, குலுவில் 76, மண்டியில் 44, சம்பாவில் 62 கின்னூரில் 7 மற்றும் காங்க்ராவில் ஒரு சாலையும் ஆகும்.
674 மின்சார விநியோகத் திட்டங்கள் தடைப்பட்டுள்ளதாகவும், 44 நீர் விநியோகத் திட்டங்கள் தடைப்பட்டுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
1 முதல் 5 அடி வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ள நிலையில், சாலைகளில் மக்கள் பயணிப்பது சிரமமாகியுள்ளது. புத்தாண்டுக்குப் பிறகு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஹிமாசலில் குவிந்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.