கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசிடம் நிலுவை தொகை கோரி நடத்திவரும் போராட்டம், கடும் குளிருக்கு மத்தியில் இரவிலும் தொடர்ந்தது.
கொல்கத்தாவின் முக்கிய பகுதியான மெய்டானில் அம்பேத்கார் சிலை முன்பு மம்தா உள்ளிட்ட திரிணமூல் தலைவர்கள் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாநில அமைச்சர்கள் ஃபிர்ஹாத் ஹக்கீம் மற்றும் அரூப் பிஸ்வாஸ் பானர்ஜி உடன் இரவு போராட்டத்தில் இருந்ததாக கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
மத்திய அரசு, மேற்கு வங்கத்துக்கு பல்வேறு வகையில் தர வேண்டிய நிலுவை தொகை விடுவிக்கப்படாததால் இந்த போராட்டத்தை திரிணமூல் அரசு கையில் எடுத்துள்ளது.
இதையும் படிக்க: ராகுல் காந்தி நடைப்பயணம்: காங்கிரஸுக்கு ஆகும் செலவு இவ்வளவா?
திங்கள்கிழமை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும்வரை 48 மணி நேரம் இந்த போராட்டம் நீடிக்கும் எனத் தெரிகிறது.