நிலக்கரி கொண்டு செல்வோரின் மிதிவண்டிகளை ராகுல் காந்தி பார்வையிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இரண்டாவது கட்ட ஒற்றுமைக்கான நீதிப் பயணம், மணிப்பூரில் தொடங்கி அஸ்ஸாம், மேகாலயா, மேற்கு வங்கம், பிகாரை கடந்து ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.
ஜார்கண்ட் மாநில எல்லையில் இருந்து ராஞ்சி நோக்கி ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்ட போது, நிலக்கரி சுமை ஏற்றிய மிதிவண்டிகளுடன் சென்ற இளைஞர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
அந்த புகைப்படங்களை வெளியிட்டு எக்ஸ் தளத்தில் ராகுல் பதிவிட்டது:
“நாள்தோறும் 200 கிலோ எடையுள்ள நிலக்கரியை மிதிவண்டிகளில் சுமந்து கொண்டு 400 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் இந்த இளைஞர்களின் வருமானம் பெயரளவுக்குதான் உள்ளது.
அவர்களுடன் நடக்காமல், அவர்களின் சுமையை உணராமல் அவர்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ள முடியாது. இளம் தொழிலாளர்களின் வாழ்க்கை வீழ்ச்சியடைந்தால், நாட்டின் கட்டமைப்புச் சக்கரம் நின்றுவிடும்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.