பாஜக தலைமையிலான மத்திய அரசு அமலாக்கத்துறை சோதனைகளை நடத்தி ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்துவதாக தில்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி கூறியுள்ளார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு அமலாக்கத்துறை சோதனைகளை நடத்தி ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுபாஜக தலைமையிலான மத்திய அரசு அமலாக்கத்துறை சோதனைகளை நடத்தி ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்துவதாக தில்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி கூறியுள்ளார். த்துவதாக தில்லி அமைச்சரும், ஆத் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி கூறியுள்ளார்.
பணமோசடி வழக்கின் ஒரு பகுதியாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் செயலாளர் பிபவ் குமார் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.யும், கட்சியின் பொருளாளருமான என்.டி.குப்தா ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
கலால் கொள்கை வழக்கு தொடர்பான சாட்சிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் விசாரணை நிறுவனத்தால் பலவந்தம் மற்றும் அச்சுறுத்தல் மூலம் பெறப்பட்டதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.
ஆம் ஆத்மியின் தலைவர்கள் மீது சோதனை நடத்தி அச்சுறுத்துவதற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு அமலாக்கத்துறையைப் பயன்படுத்துகிறது, கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்தியும், கலால் கொள்ளை மோசடியில் எதுவும் கண்டறியப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.