விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

22 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன் தாயுடன் இணைந்தார்.. ஆனால்?

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன் மீண்டும் தாயுடன் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துளள்து.

News image
ஆண் பிள்ளைகள்
Updated On :7 பிப்ரவரி 2024, 12:40 pm

DIN


உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன் மீண்டும் தாயுடன் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துளள்து.

காணாமல் போன போது 11 வயதாக இருந்த மகன், தற்போது ஒரு துறவியாக, தனது சொந்த ஊருக்கு வந்து தாயை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. துறவியாக மாறிய மகன், கையில் வாத்தியக் கருவியை வைத்துக்கொண்டு மிக அழகாக இறைப்பாடல்களைப் பாடுகிறார்.

இது குறித்து கிராமத்தினர் கூறுகையில், ரிதிபால் சிங்கின் 11 வயது மகன் பிங்கு, 2002ஆம் ஆண்டு தில்லியில் வசித்து வந்த போது தந்தை திட்டியதால் வீட்டைவிட்டு வெளியேறினார்.  தொடர்ந்து பல ஆண்டுகளாக பிங்குவை பெற்றோர் தேடி வந்தனர். இப்படியே 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது பெற்றோரை தேடி சொந்த ஊருக்கு வந்த பிங்குவை பெற்றோரும், ஊர்க்காரர்களும் எளிதாக அடையாளம் கண்டுகொண்டனர்.

தாய், தந்தையைப் பார்த்து விட்டுக் கிளம்பிய பிங்குவை தங்களுடன் இருக்கும்படி பெற்றோர் வற்புறுத்தியும், துறவியான தான், குடும்பத்துடன் இணைய வரவில்லை என்றும், துறவியின் ஒரு கடமையாக குடும்பத்தினரின் ஆசியைப் பெற வேண்டியே வந்ததாகவும் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.