தில்லியில் 6 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் - ஆம் ஆத்மி

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி, தில்லியில் 6 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் 6 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் - ஆம் ஆத்மி

புது தில்லி : எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி, தில்லியில் போட்டியிடும் மக்களவைத் தொகுதிகள் குறித்து காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு (பிஏசி) கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தோ்தலுக்கான கட்சி வேட்பாளா்கள் மற்றும் காங்கிரஸுடன் கூட்டணிக்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சந்தீப் பதக் கூறியதாவது, “குஜராத்தில் இந்தியா கூட்டணி சார்பில் 8 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட கோரிக்கை வைத்துள்ளோம்.

தில்லியில் மொத்தம் 6 மக்களவைத் தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிட விருப்பப்படுகிறது. காங்கிரஸுக்கு ஒரு தொகுதி வழங்க முடிவு செய்துள்ளோம்.காங்கிரஸ் கட்சி கூட்டணிப் பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்கவில்லையெனில், தில்லியில் 6 தொகுதிகளில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம்” என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com