மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்படும் என பாஜக மூத்த தலைவரும் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய சிவராஜ் சிங் செளஹான், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும் என என்ற நம்பிக்கையுள்ளது. இது மிகவும் தேவையானது. இந்த சட்டம் மூலம் மதரீதியாக துன்புறுத்தலுக்குள்ளான அண்டை நாட்டைச் சேர்ந்த சிறுபான்மை பிரிவு சகோதர சகோதரிகளுக்கு குடியுரிமை கிடைக்கும். இது யாருக்கும் எதிரானதல்ல.
குடியுரிமை திருத்தச் சட்டமானது மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2014, டிசம்பா் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளிலிருந்து இந்தியாவில் புலம்பெயா்ந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியா்கள், சமணா்கள், பெளத்த மதத்தினா், பாா்சிகள், கிறிஸ்தவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.