நாட்டை ஒன்றிணைப்பதே உண்மையான தேசபக்தி என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் இரண்டாவது நாளாக வாராணசியில் இந்தியா ஒற்றுமை நீதி நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் ஜீப்பில் சன்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். வாராணசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

வாராணசியில் ராகுல் - -
குடாலியா பகுதியைச் சுற்றிப்பார்த்த ராகுல் அங்குள்ள மக்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியது,
இந்தியா அன்பின் நாடு, வெறுப்பின் நாடு அல்ல. மக்களிடையே நடைபெறும் மோதலால் நாடு பலவீனமாகிவிடும். உண்மையான தேசப்பற்று என்பது நாட்டை ஒன்றிணைப்பதாகும்.
நாட்டில் பணக்கார்களுக்கு ஒன்று, ஏழைகளுக்கு ஒன்று என்று இரண்டு இந்தியா செயல்படுகிறது.

-
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்னைகளை காட்டுவதற்குப் பதில் ஊடகங்கள் பிரதமர் மோடியையும், ஐஸ்வர்யா ராயையும் காண்பித்து வருகின்றது. வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் மட்டுமே நாட்டில் உள்ள இரண்டு பிரச்னைகள் இவ்வாறு அவர் பேசினார்.
வாராணசியில் நடந்த நடைப்பயணத்தில் அப்னா தளம் (காமராவாடி) தலைவர் பல்லவி படேல் மற்றும் சிரத்துவின் சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) எம்எல்ஏவும் இணைந்தனர்.

-
ரேபரேலியில் நடைபெறும் யாத்திரையில் தானும் கலந்து கொள்வதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த நடைப்பயணமானது உத்தரப் பிரதேசம் வழியாக ராஜஸ்தானுக்குள் நுழைய உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டம்: ரேபரேலியில் ராகுல்!

நாட்டை தாக்கப் போகும் பொருளாதார ‘புயல்’ - பிரதமா் மீது ராகுல் சாடல்

இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன்: மமதா பானர்ஜி

அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



