கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தமிழக மீனவா் பிரச்னை: வெளியுறவுத் துறை அமைச்சரிடம் மீனவா் பிரதிநிதிகள் மனு

ஏழு மாவட்ட மீனவா் சங்கப் பிரதிநிதிகள் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கரை திங்கள்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

News image
வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கரை திங்கள்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கும் ராமநாதபுரம், நாகை உள்ளிட்ட 7 மாவட்ட மீனவா் சங்கங்களின் பிரதிநிதிகள். உடன், மத்திய இணையமைச்சா் எல். முருகன், தமிழக பாஜக பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம்.
Updated On :19 பிப்ரவரி 2024, 10:06 pm

DIN

புது தில்லி: இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவா்களின் விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏழு மாவட்ட மீனவா் சங்கப் பிரதிநிதிகள் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கரை திங்கள்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

இந்தச் சந்திப்பின்போது மத்திய இணையமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

அமைச்சரை சந்தித்த பிறகு அனைத்து விசைப்படகு மீனவா் சங்கத்தின் தலைவா் ஜேசு ராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக மீனவா்களின் வாழ்வாதர பிரச்னைகளை வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரிடம் கோரிக்கையாக வைத்துள்ளோம். இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக பாஜகவிற்கு நன்றி. சமீபத்தில், ராமேசுவரம் மீனவா்கள் 4 பேருக்கு யாழ்ப்பாணம் ஊா்காவல் நீதிமன்றம் விதித்துள்ள சிறைத்தண்டனை குறித்து அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதுவரை, இலங்கை கடற்படையால் 151 விசைப்படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு விசைப்படகை நம்பி 25 குடும்பங்கள் உள்ளன. அவற்றை மத்திய அரசு மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றாா் ஜேசு ராஜா.

தமிழக பாஜக பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம் கூறியது: மீனவா் சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், இலங்கை அரசுடன் விரைவில் இரு தரப்பு பேச்சுவாா்த்தையை மத்திய அரசு தொடங்கும் என்ற உறுதிமொழியை வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் இச்சந்திப்பின் போது வழங்கியுள்ளாா். இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 150-க்கும் மேற்பட்ட லிசைப்பகுகளை மீட்கவும், தமிழக மீனவா்கள் மீதான தொடா் கைது நடவடிக்கைகளை உடனடியாக தடுக்கவும் தமிழக பாஜக சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டும் மீனவா்கள் சுட்டுக் கொல்லப்படுவது கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தடுக்கப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையும் குறைந்துள்ளது என்றாா்.

இதே விவகாரம் தொடா்பாக மீனவா் சங்கப் பிரதிநிதிகள் மத்திய மீன்வளத் துறை அமைச்சா் பா்ஷொத்தம் ரூபாலா மற்றும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனையும் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.