ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.0 ஆகப் பதிவு

ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image
Updated On :25 பிப்ரவரி 2024, 1:12 pm

DIN

லடாக்: ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.0 அலகுகளாகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 11.48 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

லடாக் பகுதியை மையமாகக் கொண்டு பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வெளிப்பகுதியில் குவிந்தனர். நிலநடுக்கத்தின் போது வீடுகளில் இருந்த பொருள்கள் லேசாக அதிர்வதைக் காணமுடிந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

முன்னதாக, திங்கள்கிழமை காலை 6.36 மணியளவில் ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.