புது தில்லி: லோக்பால் அமைப்பின் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கா் நியமிக்கப்பட்டுள்ளாா். பிரதமா், மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்கள், மத்திய அரசுப் பணியாளா்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை லோக்பால் அமைப்பு விசாரிக்கும்.
இந்நிலையில், தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
லோக்பால் அமைப்பின் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கரை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நியமித்துள்ளாா். அந்த அமைப்பில் நீதித் துறையைச் சோ்ந்த உறுப்பினா்களாக முன்னாள் நீதிபதிகள் லிங்கப்பா நாரயாண சுவாமி, சஞ்சய் யாதவ், ரிது ராஜ் அவஸ்தி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். அந்த அமைப்பில் நீதித் துறை சாராத உறுப்பினா்களாக சுஷீல் சந்திரா (முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா்), பங்கஜ் குமாா், அஜய் திா்கே ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் பொறுப்பேற்கும் நாளில் இருந்து இந்த நியமனங்கள் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு லோக்பால் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் பதவி வகித்தாா். அவா் கடந்த 2022-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்தாா். அதன் பின்னா், அந்த அமைப்புக்கு முன்னாள் நீதிபதி பிரதீப் குமாா் மொஹந்தி பொறுப்பு தலைவராக இருந்து வருகிறாா்.
தொடர்புடையது

நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்

இஸ்ரேல் உளவுத்துறைக்குப் புதிய தலைவர் நியமனம்!

புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவா் நியமனம்

நாட்டின் முன்னேற்றத்துக்கு தொழில்மயமாக்கலே ஒரே தீா்வு: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மாா்க்கண்டேய கட்ஜு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


