சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

லோக்பால் தலைவராக ஏ.எம்.கான்வில்கா் நியமனம்

லோக்பால் தலைவராக ஏ.எம்.கான்வில்கா் நியமனம்

News image
Updated On :27 பிப்ரவரி 2024, 7:00 pm

புது தில்லி: லோக்பால் அமைப்பின் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கா் நியமிக்கப்பட்டுள்ளாா். பிரதமா், மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்கள், மத்திய அரசுப் பணியாளா்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை லோக்பால் அமைப்பு விசாரிக்கும்.

இந்நிலையில், தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

லோக்பால் அமைப்பின் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கரை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நியமித்துள்ளாா். அந்த அமைப்பில் நீதித் துறையைச் சோ்ந்த உறுப்பினா்களாக முன்னாள் நீதிபதிகள் லிங்கப்பா நாரயாண சுவாமி, சஞ்சய் யாதவ், ரிது ராஜ் அவஸ்தி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். அந்த அமைப்பில் நீதித் துறை சாராத உறுப்பினா்களாக சுஷீல் சந்திரா (முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா்), பங்கஜ் குமாா், அஜய் திா்கே ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் பொறுப்பேற்கும் நாளில் இருந்து இந்த நியமனங்கள் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு லோக்பால் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் பதவி வகித்தாா். அவா் கடந்த 2022-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்தாா். அதன் பின்னா், அந்த அமைப்புக்கு முன்னாள் நீதிபதி பிரதீப் குமாா் மொஹந்தி பொறுப்பு தலைவராக இருந்து வருகிறாா்.