

ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் நகரில் சாலை தடுப்பின் மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர்.
பிஸ்துபூர் காவல் நிலையப் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் 8 பேர் காரில் ஜாம்ஷெட்பூருக்குப் புறப்பட்டனர். அப்போது கார் அதிவேகத்தில் சென்றதால் சாலை தடுப்பின் மீது கார் மோதியது. அதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மேலும் ஒருவர் உயிரிழந்தார் மீதமுள்ள இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.