ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,
ஜம்மு-காஷ்மீரில் காலை 11.33 மணியளவில் ரிக்டர் அளவில் 3.9 அலகுகளாக பதிவாகியுள்ளது. நிலநடுக்கமானது 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.